Wednesday, September 14, 2016

இனி காலம் செல்லாது - பகுதி 2

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: இனி காலம் செல்லாது  - பகுதி 2
Date: 11:09:2016
Speaker: Pastor Micheal

Worship : Pastor Micheal & Brother Joshua

தேவச்செய்தி: Pastor Michael
" இனி காலம் செல்லாது - பகுதி 2  "

வெளி 10:6
இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று,

யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகள் 

மாற்கு 13:7
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள்; இவைகள் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.

போரைப் பற்றியும், போர்களைப் பற்றிய செய்திகளையும் நீங்கள் கேள்விப்படுவீர்கள். பயப்படாதீர்கள். உலக முடிவு ஏற்படும்முன் இவை நிகழ வேண்டும்.

இந்த உலகத்தில் பல யுத்தங்கள் நடந்தும், நடைபெற்றும், நடக்கவிருக்கவும் இருக்கின்றன வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது போல இவை யாவற்றையும் நீங்கள் காண்பீர்கள். இங்கு அப்படி நடந்த சில போர்களை பற்றி காணலாம்.

ஹிட்லர் யூதர்களை கொன்றுகுவித்தல்

மத்தேயு 27:2
அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.

மத்தேயு 27:11
இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.

மத்தேயு 27:12
பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

மத்தேயு 27:13
அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.

மத்தேயு 27:14
அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.

மத்தேயு 27:17
பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,

மத்தேயு 27:18
அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்.

மத்தேயு 27:19
அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.

மத்தேயு 27:20
பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவை கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள்.

மத்தேயு 27:21
தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்காக விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.

மத்தேயு 27:22
பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.
மத்தேயு 27:23
தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.

யோவான் 19:7
யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்.
மத்தேயு 27:24
கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக்கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.

மத்தேயு 27:25
அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள் மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.

மத்தேயு 27:26
அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

யோவான் 19:17
அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.

யோவான் 19:18
அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.

யோவான் 19:19
பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.

யோவான் 19:20
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.

யோவான் 19:21
அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.

யோவான் 19:22
பிலாத்து பிரதியுத்தரமாக: நானெழுதினது எழுதினதே என்றான்.

நான் எழுதினது எழுதினதே அதை யார் சொல்கிறார்  என்று கேட்டால் பிதாவானவர் மனுஷன் இதை சொல்லவில்லை. 

பிலாத்து என்ன பண்ணுகிறார் என்றால் இயேசுவை விடுதலை செய்ய வகை தேடி, இவர் குற்றமற்ற இரத்தம், இவரிடத்தில் நான் ஒரு தீங்கையும் காணவில்லை என்றார். ஆனால் இயேசுவின் பற்பல அற்புதங்களை நேரிலே கண்ட இந்த மக்களே அவரை சிலுவையில் அறையும் என்றார்கள். இராயனையே நாங்கள் இராஜாவாக ஏற்று கொள்கிறோம் என உரைத்தார்கள். 

பின்னர் பிலாத்து என்ன செய்கிறார் என்றால் இந்த இரத்தப்பழி  என் மேல் சுமராது, என் சந்ததி மேல் வரக்கூடாது உங்கள் மேல் தான் சுமரும் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் எனக்கூறி ஒருபாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கை கழுவி விடுகிறார். அந்த இரத்தப்பழி யூத மக்கள் மேல் வந்தது.

ஹிட்லர் காலத்தில் இது நிறைவேறுவதை நம்மால் காணமுடியும். ஹிட்லர் யூத மக்கள் பல இலட்சம்  மக்களை கொண்றுகுவித்தான். பிதாவானவர் யூத மக்களின் ஒருபகுதியை அழித்துப்போட்டார், ஆனாலும் மனதுருக்கத்தின் காரணமாக நான் இனிமேல் இவர்களை அழிக்கமாட்டேன் கடைசி காலத்திலே எல்லா இஸ்ரவேல் மக்கள் அனைவரும் எருசலேமில் ஒன்று கூடும்போது கர்த்தருடைய பாதம் கீழே இறங்கி வரும்.

ஹிட்லர் இவ்வளவு கொடுமையாக நடந்தது, பிலாத்து கை கழுவினது, அவர் உங்கள் மேல் பாவம் சுமரும் என்று சொன்னது, அதற்குப்பின் இயேசு சிலுவையில் அறையப்பட்டது இவைகள் யாவும் கர்த்தருடைய சித்தமாய் இருந்ததால் இவ்வாரு நடந்தது.
இந்த இரத்தப்பழி எப்படி நிறைவேறியது என்பதை ஹிட்லருடைய காலத்தில் நடந்ததை நம்மால் அறியமுடிகிறது. இரண்டாம் உலகப்போரின் கதாநாயகனும், வில்லனும் ஒருவரே அவர் தான் ஹிட்லர். ஜெர்மனியின் படையில் இராணுவ வீரராக பணியாற்றிய ஹிட்லர் பின் இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியின் சர்வாதிகாரியாக ஆனார். அவர்பெயரை கேட்டாலே அகிலமே அஞ்சியது.

முதல் உலகப்போரின் போது ஜெர்மனி சரண் அடைந்தது. கம்யூனிஸ்ட்களும், யூதர்களும் தான் ஜெர்மனியின் வீழ்ச்சிக்கு காரணம் என்று கருதி அவர்களை அழிக்காமல் விடமாட்டேன்  என் தனது மனதில் அவர்கள் மேல் இருந்த வெறுப்பை வெளிப்படுத்தி கர்ஜித்தார் ஹிட்லர்,
ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லர் யூதர்களை அடியோடு அழிக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒரு பாவமும் அறியாத யூதர்களைக்கைது செய்து, சிறையில் பட்டினிப்போட்டு சித்ரவதை செய்து கொன்றார். பலர் இருட்டறையில் அடைக்கப்பட்டு விஷப்புகையால் கொல்லப்பட்டனர். தினமும் சராசரியாக ஆறாயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை விஷப்புகை செலுத்தி சாகடிக்கப்பட்டனர். ஹிட்லரால் யூத மக்களின் எண்ணிக்கை மட்டும் 50 இலட்சம். 

கார்கில் போர்

கார்கில் போர் 1999இல் மே முதல் ஜூலை வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், நடந்த போராகும். இந்த போர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் நகரின் அருகில் நடந்தது. கார்கிலை மீட்க இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையான விஜய் நடவடிக்கை என்ற பெயரிலும் இது வழங்கப்படுகிறது. 
இந்திய இராணுவம், தனது இறுதித் தாக்குதலை சூலை மாதத்தின் இறுதி வாரத்தில் தொடங்கியது. திரஸ் பகுதியில் இருந்து பாகிஸ்தான் படையினர் முழுமையாக வெளியேற்றபட்ட பின், சூலை 26 ஆம் தேதி போர் முற்றிலும் முடிவுக்கு வந்தது. அந்த நாள் இந்தியாவில் கார்கில் வெற்றி நாள் என்று இந்தியாவில் ஆண்டுதோரும் கொண்டாடப்படுகிறது. போரின் முடிவில், 1972 ஆம் ஆண்டு சிம்லா உடன்படிக்கையில் இந்தியாவின் பகுதிகள் என வரையறுக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் இந்தியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

பாகிஸ்தான் இராணுவத்தின் மொத்த இழப்புகள் சரிவர மதிப்பீடு செய்யப்படவில்லை. பாகிஸ்தான் தரப்பில் 453 வீரர்கள் பலியானதாக பாகிஸ்தான் அரசு கூறியது. அமெரிக்க உளவுத்துறை, குறைந்தபட்சம் 700 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாக மதிப்பிட்டுள்ளது. நவாஸ் ஷெரீஃப், 4000 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். அவரது கட்சி வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் 3000 முஜாஹிதீன் போரளிகள், அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் மற்றொரு முக்கிய அரசியல் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி, ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் பலியானதாகக் கூறியுள்ளது. இந்தியா, 1,042 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக கணித்துள்ளது. முஷாரஃப் தனது குறிப்புகளில், 357 வீரர்கள் மரணமடைந்ததாகவும் 665 வீரர்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் இராணுவ இணையதளத்தில், 400 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் 

மாற்கு 13:8
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.

கிழக்கு ஆப்பிரிக்கப் பஞ்சம் 2011

2011 கிழக்கு ஆப்பிரிக்கப் பஞ்சம் என்பது ஆப்பிரிக்காவின் கொம்பு என அறியப்படும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் நிலவும் கடும் வறட்சியும், அதனால் ஏற்பட்ட கடும் பஞ்சமும் ஆகும். கடந்த 60 ஆண்டுகளில் இதுவே மிக மோசமான வறட்சி ஆகும். இதனால் மிக மோசமான உணவுப் பற்றாக்குறை நிலவுகிறது. இங்கு வாழும் சுமார் 11 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். இதன் மோசாமான நிலையை கருத்தில் கொண்டு ஐ.நா அதிகார பூர்வமாக தென் சூடானில் பஞ்சம் என சூலை 20, 2011 அன்று அறிவித்தது.

தென் சோமாலியாவின் பெரும் பகுதிகள், தென் கிழக்கு எதியோப்பியா, வட கிழக்கு கெனியா ஆகிய பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.  சிபூட்டி, சூடான், தென் சூடான், உகாண்டா ஆகிய பிற பகுதிகளில் தீவரமான உணவுப் பற்றாக்குறை நிலவியது.

இந்த கொடுமையான பஞ்சம் 2011 ஜூலை முதல் 2012 ஆகஸ்ட் வரை நீடித்தது. இதில் 2,60,000 மக்கள் இறந்தனர். 

இதை விட  அதிகமான பஞ்சங்கள் மனுஷகுமாரன் நாட்களில் நடக்கும்.

கொள்ளை நோய்கள் 

லூக்கா 21:11
பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.

வேதத்தில் சொல்லப்பட்டுள்ள படி இந்த உலகத்தில் உருவாகியுள்ள சில கொள்ளை நோய்களை பற்றி நாம் காணலாம்.

எச்.ஐ.வி
எச்.ஐ.வி (HIV - Human immunodeficiency virus) எனப்படுவது எய்ட்சு நோயை உருவாக்கும் ரெட்ரோவைரசு (retrovirus) வகை  வைரசுஆகும். இந்த வைரசு தாக்கும்போது, மனிதரில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்புத் திறனில் (Immunity) குறைபாடு ஏற்பட்டு, அந்த குறைபாட்டின் காரணமாக நோய் எதிர்ப்பாற்றல் முறைமை சரிவர தொழிற்படாமல், ஏனைய தொற்றுநோய்களுக்கு ஆட்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகரிக்கிறது. இலகுவாக வேறு உயிர்கொல்லி நோய்களின் தாக்கத்துக்கு உட்பட நேர்வதனால் இறப்பு ஏற்படலாம்.

இந்த வைரசானது குருதி, விந்துநீர், யோனித் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களின் மூலமாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும். பொதுவாக நான்கு வழிகளில் இந்தத் தொற்று ஏற்படும். அவையாவன: பாதுகாப்பற்ற உடலுறவு, மருத்துவ சிகிச்சை அல்லது ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் தூய்மையற்ற ஊசிகள், தாய்ப்பால், குழந்தை பிறப்பின்போது தாயிலிருந்து சேய்க்கு. மருத்துவ சிகிச்சையில் குருதி ஏற்றும்போது அதனூடாக இந்த வைரசு பரவுவதைத் தடுக்க, சேமிக்கப்படும் குருதி முதலிலேயே ஆய்வுக்குட்படுத்தி, தொற்றற்றது என்பது உறுதி செய்யப்படும்.

உலக சுகாதார அமைப்பானது இந்த வைரசால் ஏற்படும் எய்ட்சு நோயை ஒரு உலகம்பரவு நோயாக அறிவித்துள்ளது. ஆனாலும் இதுபற்றிய சரியான விழிப்புணர்வின்மையால், இது தொடர்ந்து இடர்தரும் காரணியாகவே இருந்து வருகிறது. இது கண்டு பிடிக்கப்பட்ட 1981 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டிற்குள், உலகில் கிட்டத்தட்ட 25 மில்லியன் மக்கள் இத்தீவிர வைரசு தொற்றினால் இறந்துள்ளனர் இந்த வைரசானது உலக மக்கள் தொகையின் 0.6% இனரில் தொற்றை ஏற்படுத்தியிருப்பதாக அறியப்படுகிறது 

2005 ஆம் ஆண்டில் மட்டும் 2.4–3.3 மில்லியன் மக்கள் இறப்பு இந்நோயால் ஏற்பட்டதாகவும், அதில் 570,000 க்கு மேற்பட்டோர் குழந்தைகள் எனவும் அறியப்படுகிறது. இதில் மூன்றில் ஒருபகுதி பொருளாதார வீழ்ச்சி, வறுமை நிலை காரணமாக ஆப்பிரிக்காவில் sub-sahara, பகுதியில் நிகழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன தற்போதைய நிலமையின்படி ஆப்பிரிக்காவில் 90 மில்லியன் மக்கள் இந்த வைரசு தாக்குதலுக்கு ஆட்படவிருப்பதாகவும், இதனால் கிட்டத்தட்ட 18 மில்லியன் அநாதைக் குழந்தைகள் உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன.

பறவைக் காய்ச்சல்
மக்கள் மத்தியில் பறவைக் காய்ச்சல் பீதி அதிகரித்து வருவதும், கோழி மற்றும் பறவைகள் இறைச்சியை உண்பதற்குத் தயங்குவதும். தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் பறவைக் காய்ச்சலாக இருக்குமோ என்றெல்லாம் எண்ணுபவர்களும் இருக்கின்றனர்.

உலக சுகாதார மையம் (WHO) ஆய்வக கணக்கெடுப்பின்படி கம்போடியா, வியட்நாம், இந்தோனேஷியா, தாய்லாந்து மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் 2003 முதல் 2006 வரையில் மொத்தம் 151 பேருக்கு இந்த பறவைக் காய்ச்சல் தாக்கப்பட்டு அதில் 82 பேர் மரணம் அடைந்துள்ளனர். இச்சூழலில் பறவைக் காய்ச்சல் பற்றி நீங்கள் என்ன தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?

பறவைக் காய்ச்சல் வைரஸ் முதன்முதலில் வியட்நாம் நாட்டில் 2003 டிசம்பரில் கண்டறியப்பட்டது. இருப்பினும் ஜனவரி 11, 2004 வரைக்கும் இதற்கு H5N1 என்று பெயரிடப்படவில்லை. 

டெங்குக் காய்ச்சல்
டெங்குக் காய்ச்சல் (Dengue fever) என்ற டெங்கி காய்ச்சல் அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்.

வடக்கு ஆர்ஜெண்டீனா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கெளதமாலா, குயான, ஹெயிட்டி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற வறண்ட, உலர் வெப்ப வலய நாடுகளில் இந்த நோய் பெரும்பாலும் பரவுகின்றது.

இக்காய்ச்சலின் காரணமாக இந்திய மாநிலமான தமிழகத்தில் மட்டும் 2015 ஆம் ஆண்டில் 4484 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஜிகா’ வைரஸ்
‘ஜிகா’  வைரஸ் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை அறிவித்து உள்ளது.
டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் புதிய கிருமி தொற்றி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த கிருமியின் பெயர் ‘ஜிகா’ வைரஸ். 1947–ம் ஆண்டு உகாண்டாவில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. பிறகு, 1952–ம் ஆண்டு உகாண்டாவிலும், டான்சானியாவிலும் மனிதர்களையும் தாக்கியது. சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது. அதையடுத்து, கடந்த ஆண்டு அமெரிக்க நாடுகளான பிரேசில் மற்றும் கொலம்பியாவிலும், ஆப்பிரிக்காவிலும் அக்கிருமி தாக்கியது. 13 அமெரிக்க நாடுகளில் இதன் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

பிரேசில் நாட்டில் கடந்த சில மாதங்களில், எண்ணற்ற குழந்தைகள் உடல் குறைபாடுடன் பிறந்து வருகின்றன. சிறிய தலையுடனும், மூளை பாதிப்புடனும் பிறந்துள்ளன. 3 ஆயிரத்து 500 குழந்தைகள் இதுபோன்று பிறந்திருப்பதால், இதற்கும், ‘ஜிகா’ வைரசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தொடக்க காலத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக ‘ஜிகா’ வைரஸ் தாக்குதல் இருந்ததால், மூளை பாதிப்புக்கும், அதற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழவில்லை. சமீபகாலமாகவே, இந்த சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால், கர்ப்பிணி பெண்களின் தொப்புளை தாக்கும் ‘ஜிகா’ வைரஸ், அதன்வழியாக, கருவில் இருக்கும் சிசுவின் மூளைக்கு செல்லக்கூடியது.

‘ஜிகா’ வைரஸ், அமெரிக்கா முழுவதும் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. உலகம் முழுவதும் பரவக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. இந்த கிருமி தாக்கியவர்கள், இதுவரை குணமானது இல்லை. இதற்கு தடுப்பூசியும் கிடையாது. இந்தியாவில், இக்கிருமி தாக்கியதாக இதுவரை எந்த செய்தியும் இல்லை. அதனால், மத்திய அரசு எந்த உஷார் நடவடிக்கையும் பிறப்பிக்கவில்லை.


லூக்கா 21:36
ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.

எனவே எப்போதும் தயாராக இருங்கள். நடக்கப் போகிற இக்காரியங்களில் பாதுகாப்பாகத் தொடருவதற்கு உரிய வன்மை வேண்டுமென பிரார்த்தியுங்கள். மனிதகுமாரனுக்கு முன்பாக நிற்கும் தகுதி பெறுவதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.

இனி சம்பவிக்க இருக்கிற சம்பவங்களில் இருந்து நீங்கள் தப்ப வேண்டுமானால் தேவனுடையப் பார்வைக்கு நீங்கள் உத்தமனாய் இருக்க வேண்டும், எனவே நாம் விழித்திருந்து ஜெபம் செய்ய வேண்டும் ஆகையால் அன்பான தேவ ஜனமே விழித்திருங்கள் இனி காலம் செல்லாது.

No comments:

Post a Comment