Saturday, March 24, 2018

எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்


கன்மலை கிறிஸ்துவ சபை

தேவசெய்தி : Brother Micheal

Date : 18.03.2018

எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்



யோபு 23:14
எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.

உனக்கு குறித்திருக்கிறதை மாத்திரம் அல்ல இதை காட்டிலும் இன்னும் அதிகமாய் செய்வேன் என்று இந்த வசனத்தின் மூலமாக கர்த்தர் வாக்கு பண்ணுகிறார். சரியான காலகட்டத்தில் கர்த்தர் அதை உங்களுக்கு நிறைவேற்றி முடிப்பார். உங்களுக்கு கர்த்தர் எந்த நாளை குறித்து வைத்து இருக்கிறாரோ அதை உன் குடும்பத்திற்கும், உன் பிள்ளைகளுக்கும், உங்கள் சொந்தத்திற்கும் நிறைவேற்றி முடிப்பார். வானமும், பூமியும் ஒழிந்து போனாலும் தேவனுடைய வார்த்தை என்றைக்கும் நிலைத்து நிற்கும். அவர் உங்கள் வாழ்க்கையில் குறித்து வைத்து இருக்கிறதை அவர் சரியான காலகட்டத்தில் நிறைவேற்றி முடிப்பார்.

1. உனக்கு குறித்துள்ளதை தன் கரத்தினால் நிறைவேற்றுவார் 

I இராஜாக்கள் 8:24
தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர்.

தாவீதுக்கு தேவன் தந்த வாக்குத்தத்ததை  காத்து அருளினார். அதை அவர் மகன் சாலமோன் காலத்தில் தேவன் தான் அருளினை வாக்குத்தத்தத்தை தன் கரத்தினால் நிறைவேற்றுகிறார். தேவன் உங்களுக்கு சொல்லிய வாக்குத்தத்தம் எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் மறந்து இருந்தாலும் அவர் மறக்க மாட்டார். கர்த்தருடைய கரம் உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றி முடிக்கும் சொல்லப்பட்ட வாக்கு, சொல்லப்பட்ட ஆசீர்வாதம், சொல்லப்பட்ட எல்லாவிதமான சாட்சிகள் எல்லாமே வந்து உங்கள் மேல் வந்து பலிக்கும் ஆனால் அதற்கு சில காலம் இருக்கும், தேவன் நியமித்த அவர் குறித்த அந்த காலத்தில் அது நிறைவேறும். 

2. உன் வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றுவார் 

சங்கீதம் 20:5
நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

நீங்கள் எந்த விண்ணப்பத்தோடு இதை வாசித்து கொண்டு இருந்தாலும் சரி அந்த வேண்டுதல்களையெல்லாம் தேவனாகிய கர்த்தர் நிறைவேற்றி முடிப்பார். நீங்கள் வேண்டி கொள்கிறது எதுவோ அதை அவர் நிறைவேற்றுவார்.  

3. உனக்கு சொல்லிய நல் வார்த்தைகளை நிறைவேற்றுவார் 

எரேமியா 33:14
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.

இஸ்ரவேலுக்கு கூறின நல் வார்த்தை, யூதாவுக்கு கூறின நல் வார்த்தையை அவர் நிறைவேற்றுவார். ஏனென்றால் அவர் மனுஷன் அல்லவே அவர் மனம் மாற மனுபுத்திரர் அல்லவே உனக்கு என்ன குறித்து வைத்து இருக்கிறாரோ நல்ல வார்த்தைகளை எல்லாம் உன் மேல் வந்து பலிக்கும் படிக்கு அவர் நிறைவேற்றுவார். இதோ அந்த நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

4. உனக்கு சொல்லிய வாக்குத்தத்ததை நிறைவேற்றுவார் 

ரோமர் 4:21
தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.

எனக்கு குறித்த வாக்குத்தத்ததை தேவன் நிறைவேற்றுவார் என்று முதலில் முழு நிச்சயமாய் நம்ப வேண்டும். ஏற்ற நாள் வரும் பொழுது அதை நிறைவேற்றுவார். தேவன் ஒருபோதும் நம்மை கைவிடவே மாட்டார். தாய் தந்தை மறந்தாலும் அவர் மறவாத தேவன், ஒரு இமை பொழுது கை விட்டாலும் தன் அநாதி சிநேகத்தால் மீண்டும் தன் அண்டையில் சேர்த்து கொள்ளும் தேவன் அப்படிப்பட்ட நல்ல தேவனை நாம் சேவித்து கொண்டு இருக்கிறோம். வசனம் சொல்கிறது  வாக்குத்தத்தம் பண்ணினதை அவர் நிறைவேற்றுவார். 

5. உன் காரியங்களை நீதியோடு சீக்கிரமாய் நிறைவேற்றுவார் 

ரோமர் 9:28
அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.

உங்கள் வாழ்க்கையிலே  குறித்து உள்ள காரியங்களை அவர் சீக்கிரமாய் நிறைவேற்றுவார். அதை அவர் நீதியோடு நிறைவேற்றி முடிப்பார். உன் காரியங்களை எல்லாம் சீக்கிரமாய் நிறைவேற்றி முடிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 






FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment