Thursday, April 12, 2018

நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது


கன்மலை கிறிஸ்துவ சபை

தேவசெய்தி : Brother KAMAL

Date : 08.04.2018

நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது


நீதிமொழிகள் 23:18
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

நிச்சயமாகவே எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது. மனுஷர் மேல் வைக்கும் நம்பிக்கை ஒரு நாள் வீண் போகலாம். ஆனால் தேவனாகிய கர்த்தர் மேல் நாம் வைக்கும் நம்பிக்கையோ ஒரு போதும் வீண் போகாது. சரி இந்த நிச்சயமான முடிவு எப்பொழுது வரும் என்று சொன்னால் நாம் தேவனை முழு நிச்சயமாய் நம்பும் பொழுது வரும். ஆரம்பம் அற்பமாய் இருந்தாலும் முடிவு சம்பூர்ணமாய் இருக்கும். 

நம்பிக்கை என்றால் என்ன?

ரோமர் 4:18
உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.

மேற்கண்ட வசனத்தில் நம்புவதற்கு எவ் விதத்திலும் சாத்தியக்கூறுகள் இல்லாத சூழ்நிலையில் ஆபிரகாம் ஆண்டவரை விசுவாசித்தார் இதுவே நம்பிக்கை. 

எரேமியா 17:7
கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்

நம்முடைய வாழ்வில் அநேக காரியங்களில் ஒரு நல்ல முடிவு வராதா என்று எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம். அந்த முடிவை கர்த்தர் இந்நாளில் நமக்கு தர விரும்புகிறார். 

எரேமியா 29:11
நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

என்ன ஒரு அருமையான வசனம் எனக்கு அன்பானவர்களே நீங்கள் எதிர்பார்த்து இருக்கும் முடிவினை நம் சர்வ வல்ல தேவன் அறிந்து இருக்கிறார் எனவே நீங்கள் எதை குறித்தும் கலங்க தேவை இல்லை எல்லாவற்றையும் தேவன் நன்மைக்கேதுவாய் மாற்றி அருளுவார். இன்றைக்கும் ஆண்டவர் நம் வாழ்க்கையில் தர இருக்கிற முடிவுகளை மூன்று விதமான காரியங்களில் நாம் காண்போம்.

1. நிச்சயமாகவே உன்துக்க நாட்களுக்கு முடிவு உண்டு 

ஏசாயா 60:20
உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம்.

எதற்கு முடிவு துக்க நாட்களுக்கு முடிவு நீங்கள் சொல்லலாம் அனுதினமும் துக்க நாட்களாகவே என் வாழ்க்கை இருக்கிறது. இந்த துக்கம் மனிதனை அமிழ்த்தி கொண்டு இருக்கிறது. சில நேரங்களில் என் எப்படி வாழ்கிறோம் என்று கூட நினைப்பு வருகிறது. எல்லாவிதத்திலும் நெருக்கப்பட்ட ஒரு வாழ்க்கை துக்க நாட்கள் நீடித்து கொண்டு இருக்கிறதா என் அன்பு தேவ ஜனமே கர்த்தர் சொல்லுகிறார். இந்த நாள் உன் துக்கத்திற்கு ஒரு முடிவை கொண்டு வருகிற நாள். 

I சாமுவேல் 1:6
கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.

I சாமுவேல் 1:11
சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.

I சாமுவேல் 1:13
அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,

I சாமுவேல் 1:14
அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்

I சாமுவேல் 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

I சாமுவேல் 1:18
அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.

அன்னாளை குறித்து வேதத்திலே பார்க்கிறோம் அவர்களுக்கு தொடர்ந்து துக்கம் . தமக்கு குழந்தை இல்லாததால் பலரும் பல விதமாய் பேசுகிறார்கள். அந்த வார்த்தைகள் அன்னாளுடைய இருதயத்தை துக்க படுத்தியது . மனிதர்கள் வாழ்க்கையில் அதிகமாய் பாதிக்கப்படுவது மற்றவர்கள் பேசுகிற வார்த்தையின் மூலமாகத்தான். இங்கு அன்னாளும் இப்படித்தான் ஆனால் அவர்கள் சோர்ந்து போகவில்லை தேவனுடைய சமூகத்தில் சென்று தன் இருதயத்தின் வேதனைகளையெல்லாம் கண்ணீரோடு ஊற்றி ஊக்கமாக ஜெபம் பண்ணினாள். ஒரு நாள் வந்தது அந்நாளின் விண்ணப்பம் கேட்கப்பட்டது அவள் நீண்ட நாள் துக்கத்திற்கு முடிவு வந்தது வேதம் சொல்கிறது அதற்கு பிறகு அன்னாள் துக்க முகமாய் இருக்கவில்லை அது போல இன்றைக்கு கர்த்தர் உங்கள் துக்க நாட்களுக்கு முடிவை கொண்டு வரப்போகிறார். 

2. நிச்சயமாகவே உன் நோய்களுக்கு முடிவு உண்டு 

மாற்கு 5:25
அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ,

மாற்கு 5:26
அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,

மாற்கு 5:27
இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;

மாற்கு 5:28
ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.

மாற்கு 5:29
உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.

பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ மருத்துவர் எல்லாம் கைவிடப்பட்ட நிலைமையில் இருந்தாள், வியாதியின் நிமித்தம் துக்கம் பன்னிரெண்டு ஆண்டுகளாக இந்த வேதனை பார்க்க வேண்டிய இடமெல்லாம் பார்த்தாயிற்று அந்த ஸ்த்ரீக்கு சுகமே உண்டாக இல்லை. ஆனால் அந்த ஸ்த்ரீக்கு ஒரு விசுவாசம் மட்டும் இருந்தது அந்நாட்களில் இயேசு நன்மை செய்பவராய் சுற்று திரிந்ததை அந்த ஸ்திரி கேள்விப்பட்டு அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டால் நான் சுகமாவேன் என்று விசுவாசித்து இயேசு அவள் இருந்த பகுதியில் கடந்து வரும் பொழுது அவருடைய வஸ்திரத்தின் நுனியை தொட்டாள் பன்னிரண்டு வருடங்களாக இருந்த வியாதியின் கொடுமை ஒரு முடிவுக்கு வந்தது அவள் வேதனை நீங்கி சுகமானாள். 

அந்த ஸ்திரி நம்பிக்கையோடு இயேசுவை தொட்டாள் அதை தான் நாம் வாசிக்கிறோம் உன் நம்பிக்கை வீண் போகாது. வேதம் சொல்கிறது கர்த்தருடைய வல்லமை புறப்பட்டு வந்து அவளுடைய சரீரத்தில் இருந்த வியாதியை தூக்கி போட்டது. நீண்ட நாட்களாக வியாதியின் பிடியில் தவித்து வேதனை படுகிறீர்களா ? இதற்கு முடிவே இல்லையா ? என்று கலங்கி கொண்டு இருக்கிறீர்களா கர்த்தர் உங்கள் உங்கள் நோய்களை நீக்கி உங்களை சுகப்படுத்துவார். நிச்சயமாகவே உன் வியாதிக்கு இன்றைக்கு முடிவு உண்டு. நீங்கள் இருக்கிற இடத்தில் இயேசுவை விசுவாசியுங்கள். இயேசுவை தொடுங்கள், இயேசுவை பற்றிக்கொள்ளுங்கள் இயேசுவே நீரே அல்லாமல் எனக்கு அற்புதம் செய்ய இந்த உலகத்தில் யாராலும் முடியாது  நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே என்று கேளுங்கள் ஆண்டவர் நிச்சமாய் உங்களுக்கு சுகம் தருவார்.


3. நிச்சயமாகவே உன் பாடுகளுக்கு எல்லாம் முடிவு உண்டு 

யோபு 1:3
அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரருமிருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான்.

யோபு 2:9
அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும் என்றாள்.

யோபு 42:1
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

யோபு 42:10
யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.

யோபு 42:12
கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.

யோபு தன் வாழ்விலே எல்லாவற்றையும் இழந்து பாடுகளை அனுபவித்தார். எல்லாவற்றையும் இழந்தார் பிள்ளைகளை இழந்தார், வஸ்துக்களை இழந்தார், வேலைக்காரர்களை இழந்தார், ஆஸ்தியை இழந்தார், எல்லாவிதத்திலும் ஒரு இழப்பு அந்த தேசத்திலேயே மிகவும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட மனுஷர் தனக்கு உண்டான எல்லாவற்றையும் இழந்து நிற்கும் பொழுது அவர் எப்படி பாடு அனுபவித்து இருப்பார். இது போக சரீரத்தில் வியாதி இது போக மனைவி சொன்ன சொற்கள் தேவனை தூஷித்து உயிரை விடு என்று இப்படியெல்லாம் பல வேதனையான சூழ்நிலையின் மத்தியில் யோபு வாழ்ந்தார் ஆனாலும் அவர் தேவனை தூஷிக்கவில்லை, தேவன் மீது உள்ள அவரின் நம்பிக்கை மாறவில்லை. 

யோபின் வாழ்க்கையில் உண்டான துக்கம் மகா கொடியதாய் இருந்தது. தாங்க முடியாத வேதனை, பாரம், துக்கம் ஆட்கொண்டது. எனக்கு அன்பானவர்களே ஆண்டவர் ஒரு மனிதனின் வாழ்க்கையில் அற்புதம் செய்ய ஆரம்பித்தால் அதை இந்த உலகத்தில் உருவானாலும் தடுக்க முடியாது, இழந்து போன எல்லாவற்றையும் பெரும் படியாய் தேவனுடைய வல்லமை யோபுவின் வாழ்க்கையில் கிரியை செய்தது. தேவன் யோபுவுக்கு இழந்து போன எல்லாவற்றையும் இரண்டு மடங்காக திரும்ப கொடுத்தார். அது போலவே உங்கள் வாழ்க்கையில் உள்ள பாடுகளுக்கும் ஒரு முடிவு வரப்போகிறது நீங்கள் எவற்றையெல்லாம் இழந்தீர்களோ அவற்றை தேவன் திரும்ப இரட்டிப்பாக தருவார். நிச்சயமாக முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது. 


FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment