Tuesday, July 11, 2017

நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார்


கன்மலை கிறிஸ்துவ சபை 
09.07.2017

" நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் "

ஆதியாகமம் 26:28
அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.


ஈசாக்கு எங்கு கை வைத்தாலும் கர்த்தர் அங்கு தண்ணீர் வரப்பண்ணினார். ஏன் என்றால் கர்த்தர் ஈசாக்கோடே இருந்தார். அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள். அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான். அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; என்றார்கள்.

நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.கர்த்தர் ஈசாக்கோடே இருந்ததினால் அமலேக்கியர்கள் அவருக்கு பயந்து சமரசம் பண்ண வந்தார்கள். அது போலவே தான் நீங்கள் எல்லோரும் கர்த்தரால் ஆசிர்வதிக்க பட்டவர்கள். 

எவ்வளவுதான் சத்ரு உங்களுக்கு எதிராக வெள்ளம் போல எழும்பினாலும் அவர்கள் உங்களிடத்தில் வந்து சமரசம் செய்வார்கள். ஆதியாகமம் 26:28 இல் சொல்லப்பட்டுள்ள படி நிச்சயமாக கர்த்தர் உம்மோடே கூட இருக்கிறார். அவர் எப்படியெல்லாம் நம்மோடு இருப்பார் என்பதை மூன்று விதமான காரியங்களில் நாம் இங்கே காணலாம். 

1. கர்த்தர் நம்மை நிச்சயமாய் தப்புவிப்பார் 
2. கர்த்தர் நம்மை நிச்சயமாய் ஆசீர்வதிப்பார் 
3. நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது 

இந்த மூன்று விதமான காரியத்தை ஆண்டவர் உங்களிடத்தில் உடன்படிக்கை பண்ணுகிறார். 

1. கர்த்தர் நம்மை நிச்சயமாய் தப்புவிப்பார் 

ஏசாயா 36:15
கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார், இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.

எசேக்கியா தீர்க்கதரிசி என்ன சொல்லுகிறார் என்றால் கர்த்தர் உங்களை தப்புவிப்பார். இன்றைக்கும் கர்த்தர் நம்மை எந்தெந்த இடத்திலே தப்புவிப்பார் என்று சொன்னால் எல்லா இடத்திலும் கர்த்தர் நம்மை தப்புவிக்க வல்லவராய் இருக்கிறார். எந்த காரியத்தை குறித்து நீங்கள் பயந்து கொண்டு இருக்கிறீர்களோ, அந்த காரியத்தில் இருந்து கர்த்தர் நிச்சயமாகவே உங்களை தப்புவிப்பார். இதற்கு அருமையான உதாரணத்தை நாம் காணலாம். 

தானியேல் 6:20
ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.

தானியேல் 6:21
அப்பொழுது தானியேல்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க.

தானியேல் 6:22
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.

தானியேல் 6:23
அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.

தானியேல் 6:24
தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.

இன்றைக்கு இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உன் மேல் இருப்பதால் பால சிங்கங்கள் எத்தனை வந்தாலும் நீ பார்த்து பயப்படாதே கர்த்தர் உம்மோடே கூட இருக்கிறார் அவர் நிச்சயமாய் உங்களை தப்புவிப்பார். 

தானியேல் 6:25
பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா ஜனங்களுக்கும், ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.

தானியேல் 6:26
என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்.

இன்றைக்கும் கர்த்தர் நம்மை ஜீவனோடு வைத்து, உணவு, உடை, உறைவிடம் கொடுத்து, கல்வியை கொடுத்து, வேலையை கொடுத்து கர்த்தர் நம்மை வைத்து இருக்கிறார் என்றால் இவர் ஒருவரே ஜீவன் உள்ளவர்.
 

2. கர்த்தர் நம்மை நிச்சயமாய் ஆசீர்வதிப்பார் 

எபிரெயர் 6:14
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.

நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசிர்வதிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.   

எபிரெயர் 6:13
ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு:

தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு அப்படி ஆபிரகாமுக்கு வாக்கு பண்ணினவர் உங்களை விட்டு விடுவாரோ நிச்சயமாகவே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.  

எபிரெயர் 6:15
அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.

எபிரெயர் 6:16
மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு.

எபிரெயர் 6:17
அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.

இன்றைக்கு கர்த்தர் உன்னை பார்த்து ஒரு வாக்குத்தத்தம் கொடுத்தார் என்றால், அதை அவர் மேலே ஆணையிட்டு  கொடுத்தார் என்றால் அதை நிறைவேற்றாமல் விடவே மாட்டார்.  நிச்சயமாகவே அவர் உங்களையும், உங்கள் சந்ததியையும் ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருக பண்ணுவார்.

3. நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது 

நீதிமொழிகள் 23:18
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

சாலமன் சொல்கிறார் ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு நீ இப்பொழுது சிரித்தால் அழுவதற்கு ஒரு காலம் உண்டு, நீ இப்பொழுது அழுதால் ஒரு நாள் சிரிப்பதற்கு ஒரு காலம் உண்டு. இப்பொழுது ஏழ்மையில் இருந்தால் ஒரு நாள் பணக்காரராக ஒரு காலம் உண்டு, நீ செல்வந்தராய் இருந்தால் நீ ஏழ்மையில் வர ஒரு காலம் உண்டு எனவே நிச்சயமாகவே உன் துன்பத்திற்கு ஒரு முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண் போகாது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அவர் ஒருபோதும் உன்னை கை விட மாட்டார். நிச்சயமாகவே உன்னை தப்புவிப்பார். நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பார். நிச்சயமாகவே ஒரு முடிவை தருவார் கர்த்தர் உன் பட்சத்தில் இருக்கும் பொழுது எதற்கும் நீ கலங்க தேவை இல்லை உன் நம்பிக்கை வீண் போகாது. அவர் நிச்சயமாகவே உம்மோடே கூட இருக்கிறார். ஆமென்.

FOR CONTACT 
Brother Micheal
Mobile: 9962 110 261

No comments:

Post a Comment