Tuesday, August 1, 2017

அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்


கன்மலை கிறிஸ்துவ சபை 2017 ஆகஸ்ட் மாத வாக்குத்தத்தம் 

" அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார் "

ரோமர் 9:28
அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.

அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை இந்த ஆகஸ்ட் மாதத்தில் நிறைவேற்றுவார். அவர் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், உங்கள் வாழ்க்கைக்கும் எல்லாவற்றிலும் கர்த்தர் சொல்லுகிறார். நான் நீதியோடு உன் எல்லா காரியங்களையும் இந்த மாதத்தில் நான் நிறைவேற்றுவேன்.


அவர் என்னவெல்லாம் நமக்கு நிறைவேற்றுவார் ?

1. அவர் உன் வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றுவார் 

சங்கீதம் 20:5
நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

நம்முடைய வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் இந்த மாதத்திலே நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார். 

இங்கே இஸ்ரவேலருக்கு  கர்த்தர் ஒரு காரியத்தை நிறைவேற்றுகிறார். அதினால் அவர்களுக்கு என்னை கிடைத்தது ? அதினால் அவர்கள் எப்படி கர்த்தரை மகிழ்ந்து  துதித்தார்கள் என்பதை நாம் பார்க்கலாம்.  

I சாமுவேல் 7:7
இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு,

I சாமுவேல் 7:8
சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.

I சாமுவேல் 7:9
அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச் செய்தார்.

I சாமுவேல் 7:10
சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பட்டு விழுந்தார்கள்.

I சாமுவேல் 7:11
அப்பொழுது இஸ்ரவேலர் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தரைப் பின் தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குமட்டும் அவர்களை முறிய அடித்தார்கள்.

I சாமுவேல் 7:12
அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.

இன்றைக்கு கர்த்தர் சொல்லுகிறார் நீ வேண்டுதல் செய்ய ஆரம்பிக்கும் பொழுதே அவர் உன் சத்துருக்கள் எல்லாரையும் கலங்கடிப்பார். 

ரோமர் 8:26
அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.

2. அவர் உன் ஆலோசனைகளை எல்லாம் நிறைவேற்றுவார் 

சங்கீதம் 20:4
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

இந்த மாதம் உன் குடும்பத்திற்காக எடுக்கிற முடிவுகள், இந்த மாதம் ஊழியத்தில் எடுக்கிற முடிவுகள், இந்த மாதம் வெற்றியை நோக்கி நீங்கள் எடுக்கிற முடிவுகள், இந்த மாதம் உன் வேலை ஸ்தலத்தில் எடுக்கிற முடிவுகள், இந்த மாதத்தில் உன் கல்வியில் எடுக்கிற முடிவுகள் எதுவாக இருந்தாலும் சரி உன் மனதுக்குள் எழுகிற நன்மையான காரியங்கள் அனைத்தையும் கர்த்தர் நிறைவேற்றுவார். நீ எந்த காரியத்தை நிர்ணயம் பண்ணி , ஆலோசனை பண்ணி பரிசுத்த ஆவியானவரிடம் என்னவெல்லாம் சொல்கிறாயோ அதை யாவற்றையும் கர்த்தர் நிறைவேற்றுவார். இந்த ஆலோசனைக்கு ஒரு சிறப்பான குணாதிசயம் உண்டு. அவை என்ன என்று பார்ப்போம். 

ஏசாயா 11:2
ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.

இந்த ஆலோசனை அருளுகிற ஆவியானவர் நமக்கு எல்லா சூழ்நிலைகளிலும் தக்க ஆலோசனைகளை நமக்கு வழங்கி நம்மை வழிநடத்துவார். இங்கும் தானியேல் தன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார்க்கு ஆலோசனை சொல்கிறார். 

தானியேல் 4:27
ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான்.

சங்கீதம் 73:24
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

அவர் நடத்துகிற ஆலோசனையின் வழியில் நாம் நம்மை ஒப்புக்கொடுப்போம் என்று சொன்னால் அவர் உங்கள் காரியங்களை வாய்க்க செய்து உங்களை மகிமையாய்  நடத்தி கர்த்தருக்கு என்று மகிமையான சாட்சியாய் உங்களை ஏற்படுத்துவார். கர்த்தர் உங்கள் ஆலோசனைகளை எல்லாம் நிறைவேற்றுவாராக


3. அவர் உன் நல் வார்த்தைகளை எல்லாம் நிறைவேற்றுவார் 

எரேமியா 33:14
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.

நல்ல நல்ல வார்த்தைகளை எல்லாம் உங்களை பார்த்து எவ்வளவு பேர் சொல்லி இருப்பார்கள். வசனம் தெளிவாய் சொல்கிறது சபிக்கிற வார்த்தைகள் அல்ல அவை எல்லாம் பலிக்காது இந்த மாதத்தில் கர்த்தர் உங்களை பார்த்து சொல்கிறதாவது என்னென்ன வார்த்தைகள் நீ பிறந்த நாள் முதல் இந்நாள் வரையிலும் தேங்கி ஆங்காங்கே வழியில் நிற்கிற உன் நல் வார்த்தைகளை எல்லாவற்றையும் உன் மேலும், உன் குடும்பத்தின் மேலும் வந்து பலிக்கும் படியாய் கர்த்தர் உன் எல்லா நல் வார்த்தைகளையும் நிறைவேற்றுவார். 

எரேமியா 33:6
இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.

எரேமியா 33:7
நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து,

எரேமியா 33:8
அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன்.

எரேமியா 33:9
நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச்சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

உன் வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவார். அவர் நீதியோடே சீக்கிரமாய் நிறைவேற்றுவார். உன் ஆலோசனை எல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவார்.  உனக்கு சொன்னதான நல் வார்த்தைகளை எல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவார். ஆமென். 

FOR CONTACT 
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment