Sunday, October 1, 2017

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்


கன்மலை கிறிஸ்துவ சபை 2017 அக்டோபர்  மாத வாக்குத்தத்தம்

" தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் "

Brother : Micheal

யோபு 42:2
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

இந்த மாதத்திலே கர்த்தர் நமக்கென்று என்ன செய்ய நினைத்திருக்கிறாரோ அதை நிச்சயமாக செய்து முடிப்பார். அவர் எல்லாவற்றையும் செய்ய வல்லவர், அவர் அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்ய வல்லவர், நம் வல்லவராகிய இயேசு கிறிஸ்து இந்த பத்தாம் மாதத்திலே நமக்கு என்ன செய்ய வல்லவர் என்று பார்ப்போம்.


ஏசாயா 49:26
உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

கர்த்தர் சொல்லுகிறார் இந்த பத்தாம் மாதத்தில் எல்லாவற்றில் இருந்தும் உன்னை மீட்க யாக்கோபின் வல்லவர் உன்னோடு கூட இருக்கிறார். உன்னை ஒடுக்கின யாவரிடம் இருந்தும் உன்னை மீட்க  நம் தேவனாகிய கர்த்தர் வல்லவராய் இருக்கிறார். 

1. அவர் சுதந்திரத்தை கொடுக்க வல்லவர் 

அப்போஸ்தலர் 20:32
இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாகப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.

சங்கீதம் 127:4
இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

கர்த்தர் சொல்லுகிறார் பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் அதை உனக்கு தர கர்த்தர் வல்லவராய் இருக்கிறார். 

ஏசாயா 58:13
என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,

ஏசாயா 58:14
அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.

இந்த மாதம் முழுவதும் கர்த்தர் போஷித்து உங்களை வழிநடத்துவார். 

2. அவர் வாக்குத்தத்ததை நிறைவேற்ற வல்லவர் 

ரோமர் 4:21
தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.

கர்த்தர் உங்களுக்கு அளித்த வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறார். ஆபிரகாம் கர்த்தர் தனக்கு வாக்கு பண்ணினதை அவர் நிறைவேற்ற வல்லவர் என்பதை முழு நிச்சயமாய் விசுவாசித்தார். அது போல நாமும் கர்த்தர் நமக்கு உரைத்த எல்லாவற்றையும் நிறைவேற்றுவார் என்ற ஒரு விசுவாசம் நமக்குள் இருக்க வேண்டும். 

I இராஜாக்கள் 1:20 முதல்  34 வரை

ஆண்டவர் நமக்கு ஒரு வாக்கை கொடுப்பார் என்று சொன்னால் அதை எப்படி ஆகிலும் அதை நமக்கு நிறைவேற்றி முடிப்பார்.
 

3. நாம்  வேண்டிக்கொள்வதற்க்கும் அதிகமாய் செய்ய அவர் வல்லவர் 

எபேசியர் 3:20
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,

நம் தேவன் நாம் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மிகவும் அதிகமாய் செய்ய வல்லவர். இந்த மாதத்தில் நாம் நினைப்பதற்கும் அவரை வேண்டி கொள்ளும் எல்லாவற்றிலும் ஆணடவர்  அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்ய அவர் வல்லவராய் இருக்கிறார். ஆமென்.


FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment