Friday, December 1, 2017

என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்


கன்மலை கிறிஸ்துவ சபை 2017 டிசம்பர் மாத வாக்குத்தத்தம்

1.12.2017

Message: Brother Micheal 

" என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன் "

சங்கீதம் 89:20
என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.

நம்மை கர்த்தர் தெரிந்து கொண்டு இருக்கிறார், நாம் அவர் தாசனாய் இருக்கிறோம் எதற்காக கர்த்தர் இந்த மாதத்தில் உங்களை கண்டுபிடித்தார் என்று சொன்னால் மூன்று விதமான காரியத்தை நாம் பாப்போம். 

 ஏன் அவர் கண்டுபிடித்தார்? எதற்காக கண்டுபிடித்தார் ?


1.  என் கரம் உன்னோடு கூட  உறுதியாயிருக்கும் - உன்னை பெலப்படுத்த 

சங்கீதம் 89:21
என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும் 

கர்த்தர் உன்னை கண்டு பிடித்ததன் நோக்கம் என்ன என்றால் அவருடைய கை எப்பொழுதும் உன் கூட உறுதியாய் பற்றி இருக்கும். இந்த மாதம் கர்த்தர் சொல்லுகிறார் என்னுடைய கை உன்னோடு கூட உறுதியாய் இருக்கும்.


பலவிதமான காரியங்கள் உங்கள் வாழ்க்கையில் சூழ்ந்து நெறுக்கினாலும் அவர் பெலப்படுத்தி நம்மை நடத்துவார். எனவே தான் பவுல் சொல்கிறார் என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்கு பெலனுண்டு. இந்த மாதத்தில் ஆண்டவர் உங்களை பெலப்படுத்துவார். 

லூக்கா 22:43
அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.

கெத்செமனே தோட்டத்தில் மிகுந்த வியாகுலத்தோடு பிதாவை நோக்கி ஜெபம் செய்த இயேசுவை வானத்தில்.இருந்து ஒரு தூதன் வந்து பலப்படுத்தினான். அது போலவே இந்த மாதத்தில் வானத்தில் இருந்து ஒரு தூதன் வந்து உன்னை பெலப்படுத்துவாராக. 

II தீமோத்தேயு 4:17
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன்.

இந்த மாதம் சிங்கத்தின் வாயில் இருந்து நீங்கள் இரட்சிக்க படுவீர்கள். ஏனென்றால் அவர் உங்களுக்கு துணையாய் இருந்து பெலப்படுத்துவார். 

2. என் உண்மையும், கிருபையும் உன்னோடு இருக்கும் -  உன் கொம்பை உயர்த்த 

சங்கீதம் 89:24
என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும்.

இந்த மாதம் கர்த்தர் சொல்லுகிறார் என் உண்மையும் கிருபையும் உன்னோடு கூட இருக்கும். எதெற்காக என்றால் உன் கொம்பை உயர்த்தும்படியாக 

சங்கீதம் 112:6
அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.

சங்கீதம் 112:7
துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.

சங்கீதம் 112:8
அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான்.

சங்கீதம் 112:9
வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

ஆண்டவர் நம் கொம்பை உயர்த்துவார். அதை சத்துருவால் தடுக்க முடியாது, அவர் நமக்கு உண்மையுள்ள தேவனாய் இருக்கிறார். அவருடைய கிருபை எந்நாளும் உங்களோடு இருக்கும்.


3. என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன் - உன் சிங்காசனம் அவருக்கு முன்பதாக சூரியனை போல் நிலை நிற்க 

சங்கீதம் 89:35
ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன்

சங்கீதம் 89:36
அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும்

வசனம் சொல்கிறது தாவீதுக்கு நான் பொய்சொல்லேன் நம் ஆண்டவர் அவ்வளவு அன்பாக நம் மேல் இருக்கிறார் அவர் எதற்காக அவர் ஆணையிடுகிறார் என்று சொன்னால் உங்களுடைய சிங்காசனம் என்றென்றைக்கும் தேவனுக்கு முன்பாக சூரியனை போல நிலை நிற்கும்.  


FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment