Wednesday, January 10, 2018

அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே


கன்மலை கிறிஸ்துவ சபை 
Message: Brother Micheal

" அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே "

சங்கீதம் 103:2
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

அவர் செய்த சகல உபகாரங்களையும் நீ மறவாதே. ஆண்டவர் சென்ற வருடம் உங்களுக்கு செய்த சகல உபகாரங்களையும் மறவாதீர்கள் அவர் நமக்கு செய்த நன்மையை நினைத்து பார்த்து ஒவ்வொன்றிற்கும் நன்றி சொல்லி தேவனை மகிமைப்படுத்துங்கள். நன்றி சொல்லி அவரை துதியுங்கள் அவர் கிருபை இந்த வருடம் முழுவதும் உங்களை அருமையாய் நடத்தும். கர்த்தர் செய்த சகல உபகாரங்களையும் உன் வாழ்க்கையில் நீ என்றுமே மறவாதே


1. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்தார் 

சங்கீதம் 103:3
அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து

அவர் உன்னுடைய  அக்கிரமங்கள் அனைத்தையும் மன்னித்தார் என்பதனை நீ மறவாதே. 

2. அவர் உன் நோய்களையெல்லாம் குணமாக்கினார்

சங்கீதம் 103:3
உன் நோய்களையெல்லாம் குணமாக்கி

தேசத்திலே அநேக கொள்ளை நோய்கள் எழும்பினாலும் ஆண்டவர் அவற்றையெல்லாம் உன்னையும் உன் குடும்பத்தையும் அணுகாமல் கண்மணி போல காத்து கொண்டாரே ஆகையால் அதனை மறவாதீர்கள், கர்த்தரை ஸ்தோத்தரியுங்கள்.

3. அவர் உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டார் 

சங்கீதம் 103:4
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு,

அவர் உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டார். சென்ற வருடத்தில் உன் பிராணனை அழிக்கும் படியாக பல விதமான சத்துருக்கள் உன்னை மேற்கொள்ள நினைத்தான். ஆனாலும் கர்த்தர் அதனை முறியடித்து கர்த்தர் உங்களை காப்பாற்றினாரே ஆகையால் நீ மறவாதே. மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலை பெயர்ந்தாலும் அவருடைய கிருபை எப்பொழுதும் உன்னை விட்டு விலகுவதே இல்லை. 

4. அவர் உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டினார் 

சங்கீதம் 103:4
உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,

அவர் உன்னை தம்முடைய கிருபையினாலும், இரக்கங்களினாலும் முடிசூட்டினார். நாம் இந்த வருடம் பிரவேசித்து இருப்பதே அவருடைய சுத்த கிருபை மாத்திரமே ஆகையால் அவர் உங்களுக்கு காட்டிய இரக்கத்தை எப்பொழுதும் மறவாதீர்கள்.


5. அவர் உன்னை வால வயதை போல ஆக்கிரனார் 

சங்கீதம் 103:5
நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.

மேலும் நம் தேவன் சென்ற வருடம் முழுவதும் நன்மையினால் நம்மை திருப்தி ஆக்கி இருக்கிறார். அநேக நன்மைகளை அவர் அற்புத கரத்தினால் நாம் பெற்று இருக்கிறோம் எனவே அவர் உனக்கு செய்த நன்மைகளை என்றும் மறவாதே. 

கழுகு உயா்ந்த கன்மலை வெடிப்பிலே பாதுகாப்பாக ஒரு இடத்தை தொிவு செய்து அங்கு கூடு கட்டி தனது இறக்கை, இறகு எல்லாவற்றையும் தன் அலகினால் குத்தி எடுத்து விடும்.பின்பு மீண்டும் அந்த கழுகுக்கு புதிய இறகுகள் வளரும் பின்பு முன் பறந்ததை பார்க்கிலும் மேலும் உயர எழும்பி பறக்கும். அது போல உங்கள் வாழ்க்கையும் சிறகு ஒடிந்த நிலையில் இருக்கலாம் ஆனாலும் கர்த்தர் சொல்லுகிறார் இந்த வருடத்தில் கர்த்தர் உங்களை உயர எழும்ப பண்ண போகிறார். கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போல் ஆக்கினார் எனவே அதனை மறவாது கர்த்தரை துதித்து போற்றுங்கள். 


FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment