Tuesday, October 17, 2017

நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்


கன்மலை கிறிஸ்துவ சபை

Brother : Micheal

15.10.2017

சங்கீதம் 118:17
நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.

ஆண்டவருடைய பார்வையிலே நாம் பிழைத்திருக்க வேண்டும் என்று சொன்னால் ஐந்து விதமான காரியங்களை கர்த்தர் நமக்கு தரவேண்டும்.


1. அவர் உனக்கு அனுகூலம் தந்து பிழைத்திருக்க செய்வார் 

சங்கீதம் 119:17
உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.

சங்கீதம் 119:18
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.

இன்றைக்கு தேவனுடைய அனுகூலம் நமக்கு தேவை. இந்த பூமியில் நாம் பிழைத்திருக்க தேவனுடைய அனுகூலம் நமக்கு தேவைப்படுகிறது. தாவீது சொல்கிறார் எனக்கு அனுகூலமாய் இரும் ஆண்டவரே  உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும் என்று தேவனிடத்தில் வேண்டுகிறார். இந்த உலகத்தில் நாம் பிழைத்திருக்க வேண்டும் என்று சொன்னால் தேவனுடைய அனுகூலம் நமக்கு தேவை. 

2. அவர் உன்மேல் இரக்கமாய் இருந்து பிழைத்திருக்க செய்வார் 

சங்கீதம் 119:77
நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.

இரண்டாவது காரியம் இந்த உலகத்தில் நாம் பிழைத்திருக்க வேண்டும் என்று சொன்னால் கர்த்தருடைய இரக்கம் நமக்கு தேவை. மனுஷர் கண்களிலும் நமக்கு இரக்கம் சில நேரங்களில் தேவைப்படுகிறது. நம்முடைய தேவன் மனதுருக்கம் உள்ள தேவன். அவர் எப்பொழுதுமே நம் மீது இரக்கம் உள்ளவராக இருக்கிறார். 

3. அவர் உனக்கு ஆதரவளித்து பிழைத்திருக்க செய்வார் 

சங்கீதம் 119:116
நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும்.

சங்கீதம் 119:117
என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன்.

இந்த உலகத்தில் நாம் பிழைத்திருக்க கர்த்தருடைய ஆதரவு நமக்கு தேவை அவர் ஆதரித்தார், ஆதரிக்கிறார், இனிமேலும் ஆதரிப்பார், உன் சூழ்நிலைகள் எவ்வளவு மோசம் ஆனாலும் சரி கர்த்தர் உன்னை எந்நாளும் தமது வார்த்தையின் படியே ஆதரிப்பார். உன் குடும்பம் பிழைத்திருக்கும் படி அவர் ஆதரிப்பார்.
 

4. அவர் உனக்கு தன் நீதியை தந்து பிழைத்திருக்க செய்வார் 

சங்கீதம் 119:144
உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.

உணர்வுள்ளவர்களாய் நாம் இருக்க வேண்டும். ஒரு உணர்வுள்ள ஆவியை கர்த்தர் நமக்கு வைத்து இருக்கிறார். வசனம் சொல்கிறது. இந்த சாட்சியின் நீதி தான் பரலோகத்தில் நிற்கும், பிசாசானவனின் வஞ்சத்தில் இருந்து தப்ப இந்த பூமியில் நாம் உணர்வுள்ள மனுஷர்களாக ஜீவிக்க வேண்டி இருக்கிறது. 

5. அவர் உனக்கு உதவி அளித்து பிழைத்திருக்க செய்வார் 

சங்கீதம் 119:175
என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.

இந்த உலகத்தில் பிழைத்திருக்க வேண்டும் என்று சொன்னால் உதவி வேண்டும். நமக்கு உதவி செய்கிறவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவர் அதின் அதின் காலத்திலே நமக்கு வேண்டிய உதவிகளை நமக்கு அருளி செய்வார். 



FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment