Thursday, October 26, 2017

சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்


கன்மலை கிறிஸ்துவ சபை

Brother : Micheal

Date: 22.10.2017

சங்கீதம் 119:43
சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.

சத்திய வசனம் நாம் வாயில் இருந்து நீங்காமல் இருக்க ஐந்து விதமான காரியங்களை நாம் செய்ய வேண்டும். 

நியாத்தீர்ப்பிற்காக நாம் அனைவரும் காத்து கொண்டு இருக்கிறோம். இந்த நியாத்தீர்ப்பிற்காக காத்திருப்பதற்கு நமக்கு சில விதமான காரியங்கள் தேவை. தாவீது சொல்கிறார் சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.


1. கர்த்தருடைய வசனத்தை காத்து கொள்ள வேண்டும் 

சங்கீதம் 119:44
நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.

தேவனுடைய வசனத்தை நாம் காத்து கொள்ள வேண்டும். இந்த வசனத்தை நீ காத்து கொண்டால் தான் கர்த்தருடைய நியாய தீர்ப்பிற்கு முன்பதாக காத்து கொண்டு இருதயத்தில் வைத்து இந்த உலகத்தின் காரியங்கள் உன்னை எதிர்கொள்ளும் பொழுது இந்த வசனங்களை நீ சொல்லி அதனை மேற்கொள்ள வேண்டும். இதை தான் இயேசுவம் செய்தார். 

யோவான் 12:25
தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.

இந்த வேத வசனத்தை நீ காத்து கொண்டாய் என்று சொன்னால் கர்த்தர் அவருடைய ஆயிரம் வருட அரசாட்சியில் உன்னோடு கூட இருந்து கிருபையை உன்னை காக்க கடவர். அவர் நியாய தீர்ப்பிற்காக காத்திருக்க வேண்டும், அதற்கு நாம் வேதத்தை எப்பொழுதும், என்றென்றைக்கும் காத்து கொள்ள வேண்டும்.

2. விசாலத்திலே நடக்க வேண்டும் 

சங்கீதம் 119:45
நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்.

நாம் எல்லோரும் எதற்காக சபைக்கு வாரம் தோறும் வருகிறோம் என்றால் கர்த்தருடைய நியாயப்பிரமான கட்டளைகளை ஆராய்ச்சி செய்ய, அவரை ஆராதிப்பது மாத்திரம் அல்ல, தேவனுடைய வார்த்தையை ஆராயும்படியாயும் நாம் சபைக்கு வருகிறோம். பரலோகத்திற்கு போகிற பாதை குறுகிய பாதை கர்த்தருடைய கட்டளைகளை நீ தெரிந்து கொண்டால் போதும், இந்த பூமியில் என்ன உபத்திரவம் வந்தாலும் விசாலத்திலே நடக்கலாம். நாம் தேவனுடைய கட்டளைகளை ஆராய்ச்சி செய்கிற படியினால் விசாலத்திலே நடப்போம். 

பிலிப்பியர் 1:5
உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,

பிலிப்பியர் 1:6
நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்

இந்த விசாலமான பாதையிலே இயேசு உன்னோடு கூட இருக்கிறார். என்ன தோல்விகள் வந்தாலும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் போனாலும், சஞ்சலங்கள், தவிப்புகள் அடுத்து அடுத்து வந்தாலும், என்ன நிந்தனைகள் அடுத்து அடுத்து நேர்ந்தாலும் , கையில் பணமே இல்லாத சூழ்நிலையில் இருந்தாலும், எதிர்பார்க்கிறதை வாங்க முடியாத நிலைமையில் இருந்தாலும், இயேசு உன்னோடு கூட இருந்து உன்னை விசாலமாய் நடத்தி கொண்டு போவார். 

3. கர்த்தருடைய சாட்சிகளை நாம் பேச வேண்டும் 

சங்கீதம் 119:46
நான் உம்முடைய சாட்சிகளைக்குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.

நீங்கள் வெட்கப்படாமல் பிறர்க்கு சுவிசேஷம் சொல்லும்பொழுது தேவனாகிய இயேசு கிறிஸ்து பிதாவுக்கு முன்பதாக உன் நாமத்தை சொல்லுவார். இது தான் தேவனுடைய நீதி, நாம் எப்பொழுதும் சத்தியத்தை வெட்கப்படாமல் அறிவிக்க வேண்டும் ஏனென்றால் நாம் நியாய தீர்ப்பிற்கு காத்திருக்கிறோம். 

I கொரிந்தியர் 2:5
என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.


4. மனமகிச்சியாய் இருக்க வேண்டும் 

சங்கீதம் 119:47
நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.

5. வசனத்தை தியானிக்க வேண்டும் 

சங்கீதம் 119:48
நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.

வேத வசனத்தை முற்றிலுமாய் எங்களை விட்டு நீங்க விடாதேயும் சுவாமி உம்முடைய நியாய தீர்ப்பிற்கு நாங்கள் காத்திருக்கிறோம். தேவரீர் வசனத்தை காத்து கொள்ளவும், அதன் படி நடக்கவும், எப்பொழுதும் மனமகிழ்ச்சியாய் இருக்கவும், எப்பொழுதும் அதைப்பற்றி பேசவும், எல்லா நாளும் தியானிக்கவும் கிருபை பாராட்ட வேண்டுமாய் ஜெபிக்கிறோம். ஆமென்.


FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment