Monday, October 30, 2017

நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்


கன்மலை கிறிஸ்துவ சபை

Brother : Micheal

Date: 29.10.2017

சங்கீதம் 32:7
நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். 

கர்த்தர் தான் நம்மை இனால் வரையிலும் மறைத்து வைத்து இருக்கிறார். அவர் நம்மை இக்கட்டு நாளில் விலக்கி காப்பார். நம் எல்லோர்க்கும் ஒரு மறைவிடம் உண்டு அது இயேசு கிறிஸ்துவின் மறைவிடம்.


1. அவர் கரத்தின் நிழலினால் உன்னை மறைப்பார் 

ஏசாயா 51:16
நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்.

நம் தேவனாகிய கர்த்தர் தம்முடைய கரத்தின் நிழலினால் நம்மை மறைக்கிறார். மனுஷருடைய கரத்தை பார்க்கிலும், கர்த்தருடைய கரத்தை நம்புவது மேல். நாம் எப்பொழுதும் அவருடைய கரத்தையே நம்பி இருக்க வேண்டும். 

2. அவர் தம்முடைய கூடாரத்தில் உன்னை மறைப்பார் 
சங்கீதம் 27:5
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.

சங்கீதம் 61:4
நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன்.


3. சர்வ வல்லவருடைய நிழலினால் உன்னை மறைப்பார்

சங்கீதம் 91:1
உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.

நம்மை மறைக்கிற கரம், நம்மை காப்பாற்றி அழகாய் பராமரிக்கிற ஒரு கூடாரம், உன்னதமானவரின் மறைவு இந்நாள் வரையிலும் நம்மை அழகாய் நடத்தி வருகிறவர் நம் தேவனாகிய கர்த்தர், நாம் சாகாமல் பிழைத்திருக்கும் படி நம்மை மறைத்து இருக்கிறார். இம்மட்டும் அவர் கை விடவே இல்லை, எனவே பயப்படவேண்டாம் உன்னதமானவரின் மறைவில் நாம் இருக்கிறோம். அவர் நாமத்தை அறிந்திருக்கிறபடியால் நம்மை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பார். 

FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment