Saturday, November 25, 2017

இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்

கன்மலை கிறிஸ்துவ சபை

Brother : Micheal

Date: 19.11.2017

அப்போஸ்தலர் 22:3
நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.

தேவனை குறித்து ஒரு வைராக்கியம். வசனம் சொல்கிறது நீங்களெல்லாரும் வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன். நாம் எல்லோரும் தேவனை குறித்து வைராக்யமாய் இருக்க வேண்டும்.


1. இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்

I சாமுவேல் 17:46
இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள்.

I சாமுவேல் 17:43
பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான்.

I சாமுவேல் 17:44
பின்னும் அந்தப் பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டுமிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான்.

I சாமுவேல் 17:45
அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.

இன்றைக்கு கோலியாத்தை போல உன் வாழ்க்கையில் அநேக பிரச்சினைகள் இருக்கிறது. இங்கே தாவீது கோலியாத்தை நோக்கி நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். என்று சொல்கிறார் அதுபோல நம் அன்றாட வாழ்வில் நமக்கு எதிராக, தடையாக அநேக காரியங்கள் எழுந்தாலும் தாவீதை போல வைராக்யமாய் நாம் அவற்றை மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் தாவீதுடன் இருந்த இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நம்முடன் எப்பொழுதும் இருக்கிறார் அவர் இன்றைத்தினம் உனக்கு எதிராக எழும்புகிற எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பார். 

2. நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் 

ஆகாய் 2:18
இப்போதும் இதற்கு முந்தின காலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்றகாலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்.

ஆகாய் 2:19
களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே, நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான்.

இவையெல்லாம் உங்களிடம் இல்லை ஆனாலும் இன்று முதல் இன்றைய தினம் முதல் உங்களை ஆசிர்வதிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


3.இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்

யோசுவா 3:7
கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.

யோசுவா 3:8
உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார்.

யோசுவா 3:10
பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவிலே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும் ஏவியரையும் பெரிசியரையும் கிர்காசியரையும் எமோரியரையும் எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக:

யோசுவா 3:13
சம்பவிப்பது என்னவென்றால், சர்வபூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச்சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.

யாரெல்லாம் உனக்கு எதிராக எழும்பினார்களோ, யாரெல்லாம் உனக்கு விரோதமாய் எழும்பினார்களோ, யாரெல்லாம் உன்னை அற்பமாய் எண்ணினார்களோ அவர்கள் கண்களுக்கு முன்பதாகத்தான் உன்னை மேன்மைப்படுத்துவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆண்டவர் சொல்கிறார் நான் மோசேயோடு இருந்தது போல உன்னோடு கூட இருப்பேன். அவர் நிச்சயமாக உங்களை மேன்மைப்படுத்துவார். 

மூன்று விதமான காரியங்களில் நாம் வைராக்கியத்தை பார்க்கிறோம், தாவீதுக்கு அந்த வைராக்யம் இருந்தது, இஸ்ரவேல் ஜனங்களிடையே ஆண்டவர் நம்மை எப்படியாகிலும் போஷிப்பார் என்ற வைராக்யம் இருந்தது, அந்த வைராக்கியத்தை பார்த்த கர்த்தர் அவர்களை ஆசிர்வதித்தார். மூன்றாவதாக யோசுவா அநேக விதத்திலே துவண்ட நேரத்திலே இஸ்ரவேல் ஜனங்கள் என் பேச்சை கேட்ப்பதில்லை என்று என்னை ஏளனமாய் பார்க்கிறார்கள் என்று சொன்ன மாத்திரத்தில் ஆண்டவர் அவர்களுக்கு முன்பதாக யோசுவாவை மேன்மைப்படுத்த யோர்தானை குவியலாய் நிற்க பண்ணினார். உன்னை எதிர்த்து பேசுகிறவன், உன்னை அழிக்க நினைக்கிறவன் முன்பதாக உன்னை மேன்மைப்படுத்துவார், நீ அவர் மேல் கொண்டு உள்ள வைராக்யத்திற்காக உன்னை மேனமைபடுத்துவார். 




FOR CONTACT
Brother Micheal
Mobile: +91 9962 110 261

No comments:

Post a Comment