Saturday, December 24, 2016

வர்தா புயலில் சேதமடைந்த கன்மலை கிறிஸ்துவ சபையை புதுப்பிக்கும் பணியினை தாங்கும் படி அன்புடன் அழைக்கிறோம்

கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 

II நாளாகமம் 7:15
இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும்.

கடந்த 12.12.2016 ஆம் தேதி  அன்று " வர்தா " புயலின் காரணமாக ஏற்பட்ட சீற்றத்தால் திருவெற்றியூர் பகுதியில் அமைந்துள்ள கர்த்தருடைய ஆலயமாகிய கன்மலை கிறிஸ்துவ சபை முற்றிலுமாக சேதம் அடைந்து அதில்  கர்த்தருடைய ஊழியத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் பாழாகியுள்ளது. எனவே நெகேமியா காலத்தில் எருசலேம் ஆலயம் செப்பனிடப்பட்டது போல் நீங்களும் இத்திருசபையை செப்பனிடுவதற்கு உங்களால் இயன்றதை கர்த்தருடைய ஆலயத்திற்கு அளித்து உதவிடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

இந்த திருச்சபை செப்பனிடும் பணியினை உங்களின் ஜெபத்தினாலும், பொருளுதவியாலும் தாங்க முன் வரும் உங்களையும் உங்கள் குடும்ப அங்கத்தினர்களையும் தேவனாகிய கர்த்தர் இந்த உலக ஆசிர்வாதங்களினால் மட்டும் அல்லாது  கன்மலை சபைக்கு உதவிடும் உங்களுக்கு ஆண்டவர் பரலோக கணக்கில் எழுதி பரலோக நன்மைகளினாலும் நிரப்புவார்.

          கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்  கர்த்தர் உங்களோடு இருப்பார் 

                                                                    - Pastor Micheal

 Account Details:

Name :Hepsiba A
Bank :statebank of india
A/c no :32998336255
Branch :kilpauk
District :Chennai
IFSC code : SBIN0001853
MICR code : 600002021
Swift code : SBININBB

Residential Address:

Micheal, 
No 10, Palavan Nagar 
1sth Cross street
Near Bharth petrol bunk
Thiruverkadu
Chennai-600077
State-Tamilnadu

For Contact: 

Pastor Micheal : +91 9500110261
Brother Narendra Babu : +91 9791665747
Brother Kamal : +91 7418525191

Email: 
kanmalaisabai25@gmail.com
kamald12@gmail.com



Saturday, December 17, 2016

உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.
Date: 27:11:2016
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael 

ஏசாயா 60:15
நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்.

கர்த்தர் தலைமுறை தலைமுறையாய்  நம்மை  மகிழ்ச்சியாய் வைக்கப்போகிறார். வசனம் மூன்று விதமான காரியங்களை சொல்கிறது, நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், கடந்து போவதும், அப்படிப்பட்டவராய் நீங்கள் இருந்தாலும் உங்களை எப்படி கர்த்தர் வைக்க போகிறார் என்றால், மாட்சிமையாய் நம்மை மாற்றப்போகிறார், உனது வேலை ஸ்தலத்திலே மாட்சிமை இல்லாமல் இருக்கிறாயோ, கர்த்தர் சொல்கிறார் நான் உன்னை மாட்சிமையாய் வைப்பேன் என்று ஆமென், நீங்கள் எதினால் நெகிழப்பட்டீர்களோ, நீங்கள் எதினால் கைவிடப்பட்டீர்களோ, எதினாலே உங்களை ஒருவரும் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த காரியத்திலே உன்னை மாட்சிமையாய் மாற்றி, உனக்கு மகிழ்ச்சியை தருவது மட்டும் இல்லாமல், நித்தியமாய், தலைமுறை தலைமுறையாய் மகிழிச்சியை கர்த்தர் தரப்போகிறார். ஆமென், அல்லேலூயா. 

எப்படிப்பட்ட காரியங்களில் கர்த்தர் நமக்கு மகிழ்ச்சியை வைத்திருக்கிறார் என்பதை இங்கு மூன்று விதமான காரியங்களில் நாம் காணலாம். 

1.  கர்த்தர் நீதிமான்களின் நம்பிக்கையை மகிழ்ச்சியாய் மாற்றுவார் 

நீதிமொழிகள் 10:28
நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும்.

நீங்கள் எல்லோரும் நீதிமான்கள், என்றைக்கு நீங்கள் கர்த்தருடன் உடன்படிக்கை செய்தீர்களோ, என்றைக்கு கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்று கொண்டீர்களோ அப்பொழுதே நீங்கள் எல்லோரும் நீதிமான்கள். உங்களை குற்றப்படுத்த ஒரு இலட்சம் பேர் சேர்ந்து நீ குற்றவாளி என்று சொன்னாலும், நீ பாவத்தை செய்தாய் என்று ஒதுக்கி வைத்தாலும் சரி கர்த்தர் உங்களை நீதிமானாக்க கல்வாரி சிலுவையிலே தன்னையே ஒப்பு கொடுத்தார். கர்த்தருடைய கிருபை காலை தோறும் புதிதாய் இருக்கும். நீதிமான்களாகிய உங்களின் நம்பிக்கையை மகிழ்ச்சியாய் மாற்றுவார். மனிதரிடம் நாம் வைக்கும் நம்பிக்கை பொய்யாய் போகலாம் ஆனால் கர்த்தரிடம் வைக்கும் நம்பிக்கையோ எப்பொழுதும் நிலைத்து நிற்கும், ஏனென்றால் நம் தேவனாகிய கர்த்தர் பொய்யுரையா தேவன், அவர் உடன்படிக்கையின் தேவன், உங்களின் மன விருப்பங்களை கர்த்தர் நிறைவேற்றி மகிழ்ச்சியால் உங்களை நிரப்புவார்.

கிறிஸ்துவ வாழ்க்கையே ஒரு நம்பிக்கையின் வாழ்க்கை, பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளே இருப்பதினால் அந்த நம்பிக்கையை கொடுத்து கர்த்தர் கிருபையாய் நம்மை வழிநடத்துகிறார். இயேசுவின் வருகை மிக சமீபமாய் இருக்கிற இந்த காலத்திலே நம்பிக்கையாய் நம் நாயகனை எதிர்நோக்கி கொண்டிருக்கும் இந்த காலத்திலே ஒரு நாள் இல்லை ஒரு நாள் நம் தேவனாகிய கர்த்தர் நடுவானிலே மின்னல்கள் முழங்க சேனைகளோடு இறங்கி வருவார். இந்த நமிக்கையிலே ஒரு மகிழ்ச்சி இருக்கா இல்லையா ஆமென். 

சங்கீதம் 39:7
இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை.

சங்கீதக்காரன் சொல்கிறார் நீரே என் நம்பிக்கை என்று நீங்கள் கர்த்தர் மீது நம்பிக்கை வைத்தால் போதும் அவர் உங்களின் நம்பிக்கையை மன மகிழ்ச்சியாய் மாற்றுவார். 

சங்கீதம் 71:14
நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.

என்னதான் தோல்விகள் வந்தாலும், சத்ருவின் தடைகள் வந்தாலும், நாம் எப்பொழுதும் எல்லா காலத்திலும் தாவீதை போல கர்த்தரை மேன்மேலும் துதித்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு நீங்கள் துதிக்கும் பொழுது உங்கள் நம்பிக்கையெல்லாம் கர்த்தர் மகிழ்ச்சியாய் மாற்றுவார்.

2. கர்த்தர் உங்கள் ஆத்துமாவை மகிழ்ச்சியாக்குவார் 

ஏசாயா 55:2
நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.

மனுஷன் அப்பதினால் மாத்திரம் அல்ல தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையால் பிழைக்கிறான். கர்த்தருடைய வார்த்தை நம்மை தேற்றுகிறது, பிழைப்பூட்டுகிறது அதுவே கொழுமையான பதார்த்தம். நாம் கர்த்தருடைய வார்த்தைக்கு கவனமாய் செவி கொடுக்க வேண்டும். ஒரு ஆத்துமா கலங்கி வருகிறது என்று சொன்னால் அந்த ஆத்துமா எதற்காக வியாகுலப்பட்டு வருகிறது என்றால் அந்த ஆத்துமாவை தேற்ற பரிசுத்த ஆவியானவர் வார்த்தைகளை அளித்தால் அதை தவறாமல் அவருக்கு சொல்லி விடுங்கள், ஏனெனில் அவர்களின் ஆறுதலுக்கான தேடல் கர்த்தருடைய வார்த்தையில் மட்டுமே உள்ளது அதுவே அவர்களுக்கு கொழுமையான பதார்த்தம் ஆகும். 

சங்கீதம் 39:9
என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும்.

சங்கீதம் 39:10
சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும்.

நமெக்கெல்லாம் உலகத்திலே சொத்து வேண்டாம், பந்தம் வேண்டாம், நகைகள் வேண்டாம், இது எதுவுமே வேண்டாம். கர்த்தருடைய இரட்சிப்பு முக்கியம். உலகத்திலே யாருக்குமே கிடைக்காத ஸ்லாக்கியம் நமக்கு உண்டு நாம் அனைவரும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேற பெற்ற இரத்தத்தால் மீட்கப்பட்ட ஜனம். ஆமென். இந்த இரட்சிப்பினால் மகிழ்திருந்து நித்யநித்யமாய் அவரோடு பரலோகத்தில் ஒன்றாய் இருப்போம். அதை விட பெரியது எதுவுமே இல்லை. அந்த மகிழ்ச்சி நமக்கு போதும் அல்லேலூயா. 

3. கர்த்தர் உங்களுக்கு பெலன் தந்து மகிழ்ச்சியாக்குவார்

நெகேமியா 8:10
பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.

கர்த்தரிடத்தில் மகிழ்ச்சியாய் இருப்பதால் வரும் பெலன், அந்த பெலனே நம்மை நீண்ட நாள் வாழ வைக்கும் அந்த பெலன் தேவன் கொடுத்த பெலன் அது எப்படி இருக்கும் என்று சொன்னால் நீங்கள் எவ்வளவுதான் சோர்ந்து போனாலும் எழுந்து நிற்க வைக்கும் பெலன். இந்த பெலனை கொள்ளை அடிக்க சாத்தான் அநேக விதமான காரியங்களை கொண்டு வருவான். அந்த பெலனை தேவன் உங்களுக்கு தருவாராக, சாத்தானுக்கு இடம் கொடுக்காதீர்கள் எப்பொழுதும் கர்த்தரிடத்தில் மகிழ்ச்சியாய் இருங்கள், அந்த மகிழ்ச்சியால் உண்டாகும் பெலன் இன்றைக்கு இதை படிக்கும் உங்களுக்கு தருவாராக ஆமென் அல்லேலூயா. 

Thursday, December 8, 2016

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆதரிப்பார்

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆதரிப்பார் 
Date: 20:11:2016
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael 
" கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆதரிப்பார் "

 சங்கீதம் 20:2
அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.

பரிசுத்த ஸ்தலம்  என்று சொன்னால் பரலோகம். உனக்கு ஒத்தாசை என்று சொன்னால் உனக்கு பரலோகத்தில் இருந்து உதவி அனுப்புகிறார். சீயோன் என்று சொன்னால் அவர் தங்கும் இடம். சீயோனிலிருந்து கர்த்தர் உனக்கு உதவி செய்து ஆதரிப்பார். 

1. கர்த்தர் உமது ஜெபத்தை கேட்பாராக

சங்கீதம் 20:1
ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.

நாம் எதற்கு சபைக்கு வருகிறோம், எதற்கு குடும்ப ஜெபம் செய்கிறோம், எதற்கு போராடி ஜெபிக்கிறோம் என்றால் கர்த்தரிடத்தில் இருந்து பதில் வரவேண்டும் என்பதற்காகத்தான். நீங்கள் ஜெபிக்கும் பொழுது அது ஒரு வழியாக மட்டுமே இருக்க கூடாது, உன்னுடைய ஜெபத்தை கேட்கும் படியாய் இருக்க வேண்டும். கர்த்தர் உன் ஜெபத்தை கேட்பாராக என்று சொல்லும் பொழுது நாம் எப்படி ஜெபிக்க வேண்டும். உதாரணமாக வேதத்தில் ஒரு நபர் எவ்வாறு ஜெபித்து தன் வேண்டுதலுக்கு பதில் பெறுகிறார் என்று காணலாம்.

ஆதியாகமம் 32: 20 - 32  (Click to read the verse)

யாக்கோபுடைய ஜெபம் எப்படி இருக்கிறது என்றால், அவர் இரவு முதல் காலை வரை போராடி ஜெபித்தார். யாக்கோபின் வாழ்க்கையில் பார்த்தீர்களேயானால் அநேக துன்பங்கள், கஷ்டங்கள், ஏமாற்றங்களை அவர் சந்தித்தார். எனவே எப்படியாவது என் ஜனங்கள், என் மனைவிகள், என் பிள்ளைகள், என் வேலையாட்கள் ஏசாவுக்கு முன்பதாக தப்பித்து பிழைக்க கர்த்தர் எனக்கு தயை பாராட்ட மாட்டாரா என வேண்டினார். இத்தனை வருடங்களாக எனக்கு சாபம், இழப்பு, ஏமாற்றம், என் மாமனாரிடம் இருந்து தப்பித்து எனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போய் கொண்டிருக்கிறேன். இவ்வேளையில் கர்த்தர் எனக்கு தயை பாராட்டும்படி என் சகோதரன் முன்பாக இரக்கம் செய்ய மாட்டாரோ என்று சொல்லி மிகவும் போராடி ஜெபித்தார்.
நீங்களும் அப்படிதான் கர்த்தராகிய இயேசுவிடம் ஆண்டவரே நீங்கள் என்னை ஆசீர்வதித்தே ஆக வேண்டும் என்று போராடி ஜெபிக்க வேண்டும். யாக்கோபு எவ்வளவு கருத்தாய் ஜெபித்தார் பாருங்கள். இரவு முதல் காலை வரை கர்த்தரின் தூதனானவரை விடாமல் பிடித்து கொண்டார். நீங்கள் என்னை ஆசிர்வதித்தே ஆக வேண்டும் இல்லையென்றால் உங்களை போக விடமாட்டேன் என்று உறுதியாய் ஜெபிக்கிறார்.

நாம் கர்த்தரிடத்தில் ஜெபிப்பது ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ள தான். நீங்கள் யாக்கோபை போல போராடி உறுதியாய் ஜெபித்தீர்களேயானால் நம் தேவனாகிய கர்த்தர் நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார்.

2. கர்த்தர் உமது மனவிருப்பதை நிறைவேற்றுவாராக 

சங்கீதம் 20:4
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

I இராஜாக்கள் 3:5 முதல்13 வரை உள்ள வசனங்கள் 

நீங்கள் திட்டமிடுபவைகள் யாவும் நடக்க வேண்டும். விருத்தசேதனம் இல்லாதவன் திட்டம் போடுவது இந்த பூமியிலே நடக்கும் என்று சொன்னால் தேவனுடைய புத்திரர் எனப்படுகிற நீங்கள் திட்டம் போடும் எந்த ஒரு காரியத்தையும் நிறைவேற்ற கர்த்தர் வல்லவராயிருக்கிறார். நீங்கள் திட்டம் போடுவது நடக்கும் அதுதான் உண்மை. ஏனென்றால் பிதாவாகிய தேவன் தம் பிள்ளைகள் எது கேட்டாலும் தருவார். இங்கே வசனத்தை வாசித்தோம் ஆனால் உன் மனவிருப்பதின் படி தந்தருளுவேன் என்று கர்த்தர் கூறுவதை பார்க்கிறோம். நம் தேவனாகிய கர்த்தருக்கு பிரியமானவற்றை செய்தால் நமது மனவிருப்பங்களை நிறைவேற்ற கர்த்தர் வல்லவராயிருக்கிறார்.

கர்த்தருடைய மனவிருப்பதின் படி கேட்பீர்கள் என்று சொன்னால் நீங்கள் கேளாததையும் கர்த்தர் தருவார். நீங்கள் எவற்றில் எல்லாம் பெலவீனமாக இருக்கிறீர்களோ உங்களது வேண்டுதலை கேட்டு தேவனாகிய கர்த்தர் உங்களை ஆதரித்து பெலப்படுத்துவார். இங்கு சாலொமோன் தாழ்மையாக கர்த்தரிடத்தில் வேண்டி கொள்கிறார். 

உங்கள் ஊழியனான நான் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் ஒருவனாக இருக்கிறேன். அங்கே ஏராளமான ஜனங்கள் இருக்கின்றனர். அவர்கள் கணக்கிட மிகுதியாக இருந்தனர். ஒரு அரசன் அவர்கள் மத்தியில் பல முடிவுகளை எடுக்க வேண்டியவனாக இருக்கிறான். எனவே எனக்கு ஞானத்தைத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனால் நான் ஜனங்களைச் சிறப்பாக ஆளவும் சரியான வழியில் நியாயந்தீர்க்கவும் இயலும். இது நான் நல்லதுக்கும் தீமைக்குமான வேறுபாட்டை அறிந்துக்கொள்ளச் செய்யும். மிகப் பெரிய இந்த ஞானம் இல்லாமல் அதிக எண்ணிக்கையில் உள்ள மனிதர்களை ஆள்வது முடியாத செயல்” என்று வேண்டினான்.

இவ்வாறு சாலொமோன் வேண்டியதைக் கேட்டு கர்த்தர் மிகவும் மகிழ்ந்தார். தேவன் அவனிடம், “நீ உனக்காக நீண்ட ஆயுளைக் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உனக்காக பெரிய செல்வத்தையும் கேட்டுக் கொள்ளவில்லை. நீ உன் எதிரிகளின் மரணத்தையும் கேட்டுக்கொள்ளவில்லை. நீயோ வழக்குகளைக் கவனிக்கவும் சரியான முடிவை எடுக்கவும் ஞானத்தைக் கேட்கிறாய். எனவே நீ கேட்டதை நான் உனக்குத் தருவேன். ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தருவேன். இதற்கு முன் இதுபோல யாரும் இருந்ததில்லை என்று சொல்லும்படி உனது ஞானத்தை மகத்தான தாக்குவேன். அதோடு எதிர்காலத்திலும் உன்னைப் போல் யாரும் இருக்கமாட்டார்கள். அதோடு, நீ கேட்காத சிலவற்றையும் உனக்குப் பரிசுகளாகத் தருவேன். உனது வாழ்க்கை முழுவதும் நீ செல்வமும் சிறப்பும் பெற்று விளங்குவாய். இந்த உலகில் உன்னைப்போல் எந்த அரசரும் இல்லை என்று செய்வேன்.  

3. கர்த்தர் உமது வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றுவாராக 

சங்கீதம் 20:5
நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.

மத்தேயு 8:5 முதல்10 வரை உள்ள வசனங்கள் 

நூற்றுக்கு அதிபதி தன்னை தாழ்த்தி வெறுமையாக்கி இயேசுவிடம் வேண்டுதல் செய்கிறார்.இயேசு அந்த அதிபதியின் தாழ்மையையும், விசுவாசத்தையும் கண்டு அவருக்கு பிரதியுத்தரமாக உன் விசுவாசத்தின் படியே ஆகக்கடவது உன் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்று சொல்கிறார். 

இங்கே அந்த நூற்றுக்கு அதிபதி அதிகாரமாய் கேளாமல் தாழ்மையாய் வேண்டி கேட்கிறார். கர்த்தர் அவர் வேண்டுதலை நிறைவேற்றுகிறார் அது போலவே இந்த நூற்றுக்கு அதிபதியின் விசுவாசம் உங்களுக்குள் இருக்கும் என்று சொன்னால் கர்த்தர் உன் வேண்டுதலை நிறைவேற்றுவார்.

4. கர்த்தர் உமது காணிக்கையை பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக 

சங்கீதம் 20:3
நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. 


காணிக்கைகளை கர்த்தர் பிரியமாய் ஏற்றுக்கொள்வார், உண்மையிலேயே ஒரு பரிசுத்தவான் காணிக்கையை ஏற்றுக்கொண்டு அதை பயன்படுத்தும் போது உங்கள் மேல் ஆசிர்வாதம் கடந்து வரும். அந்த காணிக்கையை அவர் ஊழியத்திற்கு பயன்படுத்தும் பொழுது கர்த்தர் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார். நீங்கள் காணிக்கைகளை பிரியமாய் செலுத்தும் பொழுது கர்த்தர் உங்களை இன்னுமாய் ஆசீர்வதிப்பார். 

இதற்கு உதாரணமாக வேதத்தில் ஒரு சம்பவத்தை காணலாம் இங்கு இரண்டு விதமான காணிக்கையை கர்த்தருக்கு கொண்டு வருகிறார்கள் அதை பற்றி பாப்போம். காயினுடைய காணிக்கையை கர்த்தர் ஏன் அங்கீகரிக்கவில்லை என்றால் அவன் ஏனோவென்று தன் நிலத்தின் கனிகள் சிலவற்றை கொண்டுவந்து செலுத்தினான். ஆனால் ஆபேலோ தனது மந்தையில் இருந்து கொழுமையான தலையீற்றுகள் சிலவற்றை கொண்டு வந்தான் கர்த்தர் அதனை அங்கீகரித்தார். ஆபேலை போல இது நாள் வரை நீங்கள் செலுத்திய காணிக்கையை கர்த்தர் ஆசீர்வதிப்பார், இனி கர்த்தருக்கு பிரியமாய் நீங்கள் தரப்போவதையும் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Saturday, December 3, 2016

உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக

கன்மலை கிறிஸ்தவ சபை (ACA Fellowship)
Title: உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக
Date: 13:11:2016
Speaker: Brother Micheal

Worship : Brother Micheal & Brother Joshua
தேவச்செய்தி: Brother Michael 
" உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக "

யோவான் 14:27
உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக

இருதயம் என்பது மனுஷனுக்கு ஒரு முக்கிய அவயமாக இருக்கிறது. இந்த இருதயத்திலே பயமும், கலக்கமும் நிரம்ப பெற்றுஇருக்கிறது. இன்று கர்த்தர் உங்களை பார்த்து சொல்கிறார் உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமல் இருப்பதாக ஆமென்.  எந்த ஒரு காரியத்தை குறித்தும் நீங்கள் கலங்க வேண்டாம் என்று கர்த்தர் சொல்லுகிறார். இங்கே மூன்று விதமான காரியங்களை பற்றி நாம் காணலாம்.

1. நீ பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது 
2. நீ பயப்படாதே கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார் 
3. நீ பயப்படாதே உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி காயங்களை ஆற்றுவார்

1. நீ பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது 

லூக்கா 1:13
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.

லூக்கா 1:7
எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள்.

லூக்கா 1:8
அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில்,

லூக்கா 1:9
ஆசாரிய ஊழிய முறைமையின்படி, அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான்.

லூக்கா 1:10
தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

லூக்கா 1:11
அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று அவருக்குத் தரிசனமானான்.

லூக்கா 1:12
சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.

லூக்கா 1:13
தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது, உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக.

லூக்கா 1:14
உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.

லூக்கா 1:15
அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான்.

இங்கே சகரியா வெகு காலமாக குழந்தைக்காக ஆண்டவரிடத்தில் ஜெபம் செய்கிறார். சகரியா வாழ்க்கையிலே ஒரு குழந்தை இல்லாதது மிகவும் அவருக்கு வருத்தமாக இருந்தது, பல வருடங்கள் கடந்து விட்டன. ஏன் இத்தனை வருடங்கள் இவருக்கு தடை என்று சொன்னால் வசனம் சொல்கிறது யோவான் கர்த்தருக்கு முன்பாக பெரியவனாய் இருப்பான். இயேசு பிறப்பதற்கு சற்று முன்பதாக யோவான் பிறக்க வேண்டும் என்பது தேவ சித்தம் அதனால் தான் இத்தனை கால தடை சகரியாவுக்கு இருந்தது. 

சகரியாவிற்கு முன் தேவ தூதன் தோன்றி நீ பயபடாதே நீ இத்தனை நாள் வரை செய்து வந்த ஜெபம் தேவனுக்கு எட்டியது ஆகையால் பிறக்கும் அந்த மகனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக என்று சொல்கிறார். ஏன் இந்த தடை என்றால் யோவான்ஸ்னானகன் கர்த்தருக்கு வழியை ஆயுத்தம் பண்ண தெரிந்து கொல்லப்பட்டவன். இயேசு இவரிடத்தில் வந்து தான் ஞானஸ்னானம் பெற வேண்டும் என்பது தேவசித்தம் ஆகும். யோவானுடைய பிறப்பின் நிமித்தம் அநேகர் சொந்தோஷப்படுவார்கள், இவர் தான் சுவிசேஷத்தை முதலில் வனாந்திரத்தில் போதித்தார். 

இதுபோல நீங்களும் மிக நீண்ட நாளாக ஜெபம் செய்திருக்கலாம். கர்த்தரை இன்றைக்கு உங்களை பார்த்து சொல்கிறார் பயப்படாதே உன்னுடைய வேண்டுதல் கேட்கப்பட்டது அதை ஏற்ற காலத்தில் செய்வேன் என்று சொல்கிறார். நீங்கள் ஜெபிக்கும் அந்த தேவைகள் தாமதமானால் அது உங்களுக்கு கிடைக்கப்பெறும் போது மிகுந்த மகிமை வாய்ந்ததாக இருக்கும் எனவே பயம் கொள்ளாதிருங்கள் உலகத்தை ஜெயம் கொண்ட இயேசு நம் பட்சம் இருக்கிறார் ஆமென்.

I சாமுவேல் 1:17
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.

I சாமுவேல் 1:10
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:

I சாமுவேல் 1:11
சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.

I சாமுவேல் 1:12

அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

I சாமுவேல் 1:13
அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,

I சாமுவேல் 1:14
அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.

I சாமுவேல் 1:15
அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.

கர்த்தர் உன் விண்ணப்பத்தை கேட்பார், நீ ஜெபிக்கிற எந்த காரியமாக இருந்தாலும் சரி நம் தேவனாகிய கர்த்தர் மெய்யாகவே உன் வேண்டுதலை நிறைவேற்றுவார். நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு. வேதம் சொல்கிறது நீங்கள் எதை கேட்கிறீர்களா அதை பெற்று கொள்வீர்கள். விசுவாசோத்தோடே தரித்திருங்கள் இஸ்ரவேலின் தேவன் உங்கள் வேண்டுதல்களை கேட்பார்.

 2. நீ பயப்படாதே கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார் 

யோவேல் 2:21
தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.

நாம் எதை செய்தாலும் அது தோல்வியில் போய் முடிகிறதே என பயப்படுகிறோம், எதை சிந்தித்தாலும் அது விளங்கவில்லை, எல்லாவற்றிலும்  ஒரு தடை இருந்து கொண்டே இருக்கிறது. யாரிடம் போய்  இதை சொல்வது என்று தெரியவில்லை, ஒரு வித பயம் எதிர்காலத்தை குறித்த பயம் என் வாழ்க்கை எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்ற பயம், ஆகையால் கர்த்தர் சொல்கிறார் உங்களுக்காக நான் பெரிய காரியங்களை செய்வேன், ஆமென். கர்த்தர் எப்படிப்பட்ட காரியங்களை செய்வார் என்றால் வாசிப்போம்.

யோபு 5:9
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.

கர்த்தர் உங்களால் எண்ணி ஆராய முடியாத பெரிய காரியங்களை செய்வார். அவை எவ்வாறு நிகழ்ந்தது என்று உங்களால் அறிய முடியாது அப்படிப்பட்ட அதிசயமான காரியங்களை கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலே வாய்க்கப்பண்ணுவார். 

சங்கீதம் 1:3
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

நீங்கள் தன் காலத்திலே தன் கனியை தரவேண்டும் அப்பொழுதுதான் நாம் எல்லா காலத்திலும் செழித்திருப்போம் நாம் செய்யும் காரியங்கள் யாவும் வாய்க்கும் ஆமென்.

3. நீ பயப்படாதே உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி காயங்களை ஆற்றுவார்

எரேமியா 30:10
ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே , கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பி வந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.

எரேமியா 30:11
உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.

எரேமியா 30:12
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடியதாயும் இருக்கிறது.

எரேமியா 30:13
உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சொஸ்தப்படுத்தும் ஒளஷதங்களும் இல்லை.

எரேமியா 30:14
உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன்.

எரேமியா 30:15
உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன்.

எரேமியா 30:16
ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக்கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன்.

எரேமியா 30:17
அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

உங்கள் சந்ததிகளை நான் காப்பாற்றுவேன். ஒரு எதிரியும் அவனை இனி தொந்தரவு செய்யவோ பயப்படுத்தவோமாட்டான். இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே, நான் உங்களோடு இருக்கிறேன். நீங்கள் செய்த தீயவற்றுக்காக நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும், ஆனால் நான் சரியாக உங்களை ஒழுங்குப்படுத்துவேன். ஆற்ற முடியாத காயத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். குணப்படுத்த முடியாத ஒரு காயத்தைப் பெற்றிருக்கிறீர்கள். 

உங்கள் ‘நண்பர்கள்’ உங்களை மறந்துவிட்டனர். நான் உங்களைப் பகைவனைப் போன்று தண்டித்தேன். நான் உங்களை மிகக் கடுமையாகத் தண்டித்தேன். உங்களது அநேக குற்றங்களால் நான் இதனைச் செய்தேன். உங்களது எண்ணிலடங்கா பாவங்களால் நான் இதனைச் செய்தேன். நான் உங்களது உடல் நலத்தைத் திரும்ப கொண்டு வருவேன். நான் உங்களது காயங்களைக் குணப்படுத்துவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். ஆமென் ஹல்லேலூயா.